இந்தியா

எத்தனை காலம் பொறுத்துக்கொள்வது? – கனிமொழி எம்.பி

யோகா ஆன்லைன் வகுப்பின் போது இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து வெளியேறலாம் என்று மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா தெரிவித்திருப்பது, இந்தித் திணிப்பையும், ஆதிக்கத்தையும் பிரகடனப்படுத்துகிறது என பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி அதற்கு தனது கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். செயலர் ராஜேஷ் கொடேஜா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்கப்படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம் ? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

“அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில்,இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இதற்காக அச்செயலர் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில், தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியுள்ளார். அப்போது குறுக்கிட்ட தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்படி கோரியுள்ளனர். ஆனால், தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் ராஜேஷ் கொடேஜா தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.