இந்தியா

உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு திரும்பினார்…

சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் மக்கள் பிரதிநிதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான அமித்ஷாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அண்மையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இவர், அதற்கு பிந்தைய சிகிச்சைக்காக கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிகிச்சை முடிந்து ஆகஸ்ட் 31-இல் வீடு திரும்பினார்.மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன்பு, முழு உடல் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 12-ம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில், உரிய பரிசோதனைகள் முடிந்த பின் நேற்று மாலை வீடு திரும்பினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.