இயற்கைஉணவுகள்

உடல் வெப்பத்தை தணிக்க உதவும் உணவுகள்

கோடை காலம் வந்துவிட்டது. ஊரடங்கு உத்தரவு முடிந்து வெளிய சென்ற பின் வெயிலின் தாக்கத்தை முன்பை விட அதிகமாக உணரக்கூடும் . முக அழகையும், உடல் நலத்தையும் வெயில் இருந்து பாதுகாத்து கொள்ள , நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

நம் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள என்னென்ன விதமான பழங்களை உண்ணலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

வெந்தயம்

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஒரு இரவு ஊற வைக்கவும். மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்ளவும். இதை இரண்டு நாட்களுக்கு செய்யவும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். இதுவரை இருக்கும் உணவுப் பொருட்களிலேயே வெள்ளரிக்காயில் தான் அதிகபட்சமாக 96% நீர்ச்சத்து உள்ளது.

பாதாம் பிசின்னை

இரவு சிறிது அளவு பாதாம் பிசின்னை தண்ணீரில் ஊறவைத்துக், மறுநாள் காலையில் பருக வேண்டும், சூடு தணியும் வரை எடுத்துக்கொள்ளவும்.

சப்ஜா விதை

நீர்க்கடுப்பு, உடல் சூடு போன்றவற்றைத் தணிப்பதற்கும், குடல் மற்றும் வயிற்று புண்களை சிறப்பாக ஆற்றக்கூடியது.

மோர்

மதியம் உணவில் மோர் கலந்த சாதத்தில் இரண்டு மூன்று சிறு வெங்காயத்தை சேர்த்து, மூன்று நா  பரங்கிக்காயில் பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை ஏராளமாக உள்ளது. ட்களுக்கு சாப்பிடவும்.

இளநீர்

இளநீர் உடல் உஷ்ணத்தை குறைப்பது சிறந்தது. அடிக்கடி இளநீர் அருந்துவதால் வியர்வை வழியாக அத்தியாவசிய பொருட்கள் இழப்பை ஈடு செய்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. ரத்த ஓட்டத்தை சீரான அளவில் வைத்து  உடலுக்கு பலத்தைக் கொடுக்கிறது.

கரும்பு ஜூஸ்
கரும்பு ஜூஸ் கரும்பு ஜூஸில் உள்ள சர்க்கரை, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். கரும்பில் குளிர்ச்சிப் பண்புகள் உள்ளன. இது உடலில் உள்ள அதிகப்படியான வெப்பநிலையைக் குறைக்க உதவும். கோடைக்காலத்தில் உடல் சூடு பிடிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கரும்பு ஜூஸைக் குடியுங்கள். இதனால் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவதைத் தவிர்க்கலாம்.

புதினா டி

புதினாவை நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி ,வடிகட்டி தேன் கலந்து குடித்து வர , அதில் உள்ள குளிர்ச்சி தன்மையினால் உடல் சூடு தணியும்.

தண்ணீர்

இதனை விட வெப்பத்தை போக்க நாம் அதிகம் நடக்கூடிய உணவு வேறு இல்லை .கோடையில் அதிகமான அளவில் தண்ணீரைப் பருக வேண்டும். இதனால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

வாழைப்பழம்

விலைக் குறைவில் அனைத்து காலங்களிலும் கிடைக்கும் ஓர் பழம் தான் வாழைப்பழம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், ஏராளமான நன்மைகளை வழங்க வல்லது. இப்பழம் எப்பேற்பட்ட உணவையும் எளிதில் செரிமானமடையச் செய்யும். உணவு உட்கொண்ட பின் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது உணவுகளை எளிதில் செரிமானமடையச் செய்து, உடல் சூடு அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை

வெயில்   காலங்களில்   உடனடியாக நம் உடலில்  நீர்ச்சத்து குறைந்துவிடும்.  இதற்கு நீங்கள் திராட்சை பழத்தை   எடுத்துக் கொள்ளலாம். திராட்சை பழம் உண்ணுவதன்   மூலம் உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்கள் கிடைக்க   செய்கின்றன.

முலாம் பழம்

முலாம் பழம் கோடையில் விற்கப்படும் மற்றொரு சுவையான பழம் தான் முலாம் பழம். இந்த பழத்திலும் நீர்ச்சத்து மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. இந்த முலாம் பழத்தை ஜூஸ் தயாரித்து தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

தர்பூசணி

தர்பூசணி உடல் சூட்டைக் குறைக்க உதவும். இதற்கு அதில் உள்ள அதிகளவிலான நீர்ச்சத்து தான் காரணம். மேலும் தர்பூசணியை ஒருவர் தொடர்ச்சியாக கோடையில் சாப்பிட்டு வந்தால், அது உடல் வறட்சியைத் தடுத்து, உடலை போதிய நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ளும். அதற்கு தர்பூசணியை சிறு துண்டுகளாக்கி, அத்துடக் சிறிது சர்க்கரை மற்றும் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்துக் குடியுங்கள். இல்லாவிட்டால், அதை சாலட் போன்று செய்தும் சாப்பிடலாம்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.