சினிமா

தீபிகா படுகோன் போதைப் பொருள் வழக்கில் இன்று ஆஜர்…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ தீவிரமாக விசாரித்துவருகிறது. இந்த வழக்கில் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான விவகாரம் எழுந்ததால், போதைப் பொருள் தடுப்பு அமைப்பும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஏற்கெனவே நடிகை ரியா சக்ரவர்த்தி போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கில் கைதானார்.

பாலிவுட் நடிகைகள் தீபிகா படுகோன், சாரா அலிகான், ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ரகுல் ப்ரீத் சிங் நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். 3 நாட்கள் விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்பு அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். தீபிகா படுகோன் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருடன் தானும் ஆஜராக அனுமதி தருமாறு அவரது கணவரும், நடிகருமான ரன்வீர் சிங் கோரியுள்ளார்.

இந்நிலையில் தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் ஆகியோர் இன்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் முன் ஆஜராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்காக கோவாவில் இருந்த தீபிகா நேற்று மும்பை வந்து சேர்ந்தார். என்சிபி விசாரணைக்கு நாளை ஆஜராக தீபிகா ஒப்புக் கொண்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. தீபிகாவுடன் அவரது மேலாளர் கரிஷ்மா பிரகாஷ் , சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் ஆஜராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.