இந்தியா

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மன்னிப்பு கோரப்போவதில்லை” – வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் தொடர்பாக பிரசாந்த் பூஷன் தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. இது தொடர்பாக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பிரசாந்த் பூஷன் குற்றவாளி என அறிவித்தது. மேலும், பிரசாந்த் பூஷனின் கருத்து குறித்து பரிசீலிக்க 3 நாட்கள் அவகாசத்தையும் நீதிபதிகள் வழங்கினர். இந்த அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பிரசாந்த் பூஷன், தனது கருத்தை திரும்பப் பெறப்போவதில்லை என்றார். மேலும் இதற்கு தான் மன்னிப்பு கேட்டால், தனது மனசாட்சியையும், நீதிமன்றத்தையும் அவமதிப்பதாக அமையும் என்று அவர் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.