இந்தியா

“தடுப்பூசி தயாரிப்பதற்கு 1.5 ஆண்டுகள் ஆகலாம்” – செளமியா சுவாமிநாதன்

இந்தியாவில் கொரோனாவுக்கு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு சந்தைக்கு வருவதற்கு 1 முதல் 1.5 ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானிகளில் ஒருவரான செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் தொடங்கி சுமார் ஆறு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இந்தியா உட்பட உலகளவில் மொத்தம் 8 தடுப்பூசி தயாரிப்பு பணிகள் அதன் வெவ்வேறு கட்டத்தில் இருந்து வருகின்றன. தமிழக அரசின் கொரோனா தடுப்புப் பணிகளுக்கான ஆலோசனையின் முக்கிய பங்கு வகித்ததற்காக சிறப்பு விருதைப் பெற்றிருக்கும் செளமியா சுவாமிநாதன், இந்தியாவில் தடுப்பு மருந்து தயாரிப்பு முடிந்து சந்தைக்கு வருவதற்கு ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகள் காலம் ஆகலாம் எனத் தெரிவித்துள்ளார்.

”பொதுவாக ஒரு தடுப்பூசி சந்தைக்கு வருவதற்கு 5 முதல் 10 ஆண்டு காலம் ஆகும் எனவும், ஆனால் உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் நடந்துவரும் தடுப்பூசி செயல்பாடுகள் இதை விரைவுபடுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி தயாரிக்கப்பட்டாலும் சோதனைக் காலத்துக்கு நேரமெடுக்கும் என்பதால் ஒன்றரை ஆண்டுகள் ஆகும்” எனத் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்பு தயார் பணிகள் மற்றும் கொரோனா நிவாரண செயல்பாடுகளுக்கு மட்டும் 6,650 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.