சிவானந்தன்(39) தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர், திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். வருமானத்தை மீறி வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து கடன்களையும் வாங்கிவிட்டு EMI கட்ட முடியாமல் திணறி இருக்கிறார்.
அந்த ATMமின் பாஸ்வேர்ட் கடந்த 3 வருடங்களாக மாற்றப்படாமல் இருந்த விவரம் அவருக்கு தெரியவர கிருமிநாசினி தெளிப்பது போல சென்று ATM இயந்திரத்தின் லாக்கரை திறந்து ரூபாய் 8,61,900 பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் CCTV காட்சிகளை வைத்து சிவானந்தனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சொந்த ஊரில் வீடுகட்டி அதற்கு கடன் கட்ட முடியாமல் இந்த முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் விசாரணையில் அதே வங்கியில் அம்பத்தூர் கிளையில் பணியாற்றி வரும் என்பவர் இந்த கொள்ளையை நடத்தியது தெரியவந்துள்ளது.