இந்தியா

கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தனக்கு தானே அடித்து விட்டு; இளைஞர் தற்கொலை.!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் 19 வயதான சதீஷ்குமார். இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஐடிஐ இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 18-ம் தேதி குடும்ப பிரச்னையில் அவரது தந்தை மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் சதீஷ்குமாரைத் திட்டியதோடு அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதீஷ்குமார், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.

பின்னர் தன் படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றை செல்போனில் டிசைன் செய்து அதனை தனது நண்பர்கள் நான்கு பேருக்கு வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி விட்டு தலைமறைவாகி உள்ளார். கண்ணீர் அஞ்சலி போஸ்டரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினரும் நண்பர்களும் சதீஷ்குமாரை பல இடங்களிலும் தேடி வந்துள்ளனர். ஒரு நாள் முழுவதும் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மறுநாள், அருகே உள்ள மழவராயன்பட்டி கிராமத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் சதீஷ்குமார் தூக்கிட்டு சடலமாகக் கிடந்த நிலையில் மீட்கப்பட்டார். அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சடலத்தை மீட்டு உருமநாதபுரம் சுடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நிறைவேற்றியுள்ளனர்.

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி, போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில், சதீஷ்குமாரின் தந்தை, சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ வேண்டிய இளைஞர் ஒருவர், தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தயாரித்து அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆலங்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.