சென்னைதகவல்கள்

16 லட்சம் கட்டணம் கேட்ட தனியார் மருத்துவமனை…

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நோய் தொற்று காரணமாக சென்னை நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது மொத்தமாக 5 லட்சம் ரூபாய் செலவாகும் என்று சொன்னதால் மொத்தமாக பணம் கட்டி இருக்கின்றனர்.  தற்போது நோய்த்தொற்று குணமாகி விட்டது. ஆனால் இதயத்தில் பிரச்சினை இருப்பதாகவும் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் கூறுவதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மீதம் 11 லட்சத்தை உடனடியாக கட்டுமாறு மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பணம் கட்டுவதற்கு வழியில்லாத அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர்.

முதலில் 5 லட்சம் மட்டுமே செலவாகும் என்று சொல்லிவிட்டு தற்போது 16 லட்சம் என்றால் எங்கே செல்வது என்று அழுது புலம்பியபடி கேட்கிறார் நோயாளியின் மனைவி ஜெகதீஸ்வரி. இதையடுத்து சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

 

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.