தகவல்கள்

“சிறைவாசிகள் கல்வியறிவு குறைந்தவர்கள்”… ஆவணக் காப்பக புள்ளிவிவரம்!

தமிழக சிறைவாசிகளின் எண்ணிக்கையில் கல்வி அறிவு குறைந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருப்பது தேசிய குற்றப் பதிவேடு காப்பாகத்தின் புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சிறைவாசிகள் மனநோய்க்கு ஆளாவதும் புள்ளிவிபரத்தில் மூலம் அறிய முடிகிறது. குற்றங்களும், குற்றவாளிகளும் அதிகரித்து வரும் நிலையில் சிறைகளின் நிலை குறித்த தகவல்கள் பல நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தேசிய குற்றப்பதிவேடு காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரம் மூலம் தமிழக சிறை மற்றும் சிறை கைதிகள் பற்றிய தகவல்கள் பிரத்யேகமாக கிடைத்துள்ளது. அதன் படி இந்தியாவில் மொத்தமுள்ள 1350 சிறைகளில் 141 சிறைகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சப்ஜெயில்கள் என பார்க்கும் போது இந்தியாவில் மொத்தமுள்ள 617 சிறைகளில் 96 சப்ஜெயிலுடன் தமிழகம் அதிக சப்ஜெயில் கொண்ட முதல் மாநிலமாக உள்ளது.

மத்திய சிறைகள் 9, மாவட்ட சிறைகள் 13, துணை சிறைகள் 96, பெண்கள் சிறை 5, சிறார் சிறை 12, திறந்த சிறை 3, சிறப்பு சிறை 3 என்கிற எண்ணிக்ககைள் சிறகைள் உள்ளன.  சிறை அதிகம் இருப்பதில் இரண்டு விதமான கருத்து இருக்கும். ஒன்றும் அதிக குற்றவாளிகள் உள்ளனர் என்பது; மற்றொன்று குற்றவாளிகள் அதிகம் பிடிபட்டு தண்டனை பெருகின்றனர் என்பது. எது எப்படி இருந்தாலும் இதுவும் ஒருவிதமான புள்ளி விபரமே. அதே நேரத்தில் தமிழக சிறைகளை பயன்படுத்தி 23,392 பேரை சிறையில் அடைக்க முடியும். தற்போது தமிழக சிறையில் 14,707 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் 13,964 பேர் ஆண்கள்; 743 பேர் பெண்கள். 2019-ஆம் ஆண்டில் மட்டும் 71,880 பேர் சிறை சென்றுள்ளனர். இதில் கல்வி தகுதியின் அடிப்படையிலும் குற்றவாளிகளின் புள்ளி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் படி தமிழக சிறையில் அடைக்கப்பட்டவர்களில் முதுநிலை பட்டதாரிகள் 195 பேர், பட்டதாரிகள் 1278 பேர், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி பயின்றவர்கள் 640 பேர், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்கள் 2,955 பேர், பத்தாம் வகுப்புக்கு கீழ் படித்தவர்கள் 5286 பேர். கல்விஅறிவு அற்றவர்கள் 4,353 பேர். இதன் மூலம் குற்றச்செயலில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் கல்வி குறைபாடு உடையவர்கள் என்பது தெரியவருகிறது. அதே நேரத்தில் நல்ல கல்வி தகுதி உடையவர்களும் கணிசமான அளவு சிறை வந்துள்ளனர். தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிற நாட்டினர் விபரமும் அந்த அறிக்கயைில் தெரியவந்துள்ளது. அதன் படி ஆப்பிரிக்காவை சேர்ந்த 7 பேர், வங்கதேசத்தை சேர்ந்த 16 பேர், நேபாளிகள் 7 பேர், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர், இலங்கையை சேர்ந்த 55 பேர் என 119 வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சிறைக் கைதியாக தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

2019-ஆம் ஆண்டில் தமிழக சிறையில் இருந்த 77 பேருக்கு மனநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிறைக்கு வந்த பிறகு அவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவர்கள் தங்கள் குற்றத்தை எண்ணியும், குடும்பத்தை பிரிந்தும் மனவேதனை அடைந்து இந்த நிலைக்கு மாறியிருக்கலாம் என எண்ணப்படுகிறது. அதே நேரத்தில் சிறை தண்டனையை மட்டுமல்ல நல்ல தொழில் உற்பத்தியையும் ஏற்படுத்தியுள்ளது.இந்திய அளவில் சிறையிலிருந்து உற்பத்தியான பொருட்களை விற்பனை செய்து வருமானம் ஈட்டியதில் செலுங்கானா 599 கோடியே 89 லட்சம் ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளது. 72 கோடியே 96 லட்சம் ரூபாயுடன் தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்திய சிறைகளின் இன்னும் பல்வேறு நடவடிக்ககைள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது தேசிய குற்ற ஆவணக் காப்பகம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.