தமிழ்நாடு

அக்டோபர் 7-ஆம் தேதிக்குள் மாணவர் சேர்க்கை குறித்த தகவல்களை அனுப்பவேண்டும் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…

மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி, சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும், அதேபோல் 2020-21-ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் வருகிற 30-ஆம் தேதி வரை நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு, தொகுத்து வைத்திருக்கும் இந்த தகவல்களை அடுத்த மாதம் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.