தமிழ்நாடு

4000-க்கும் கீழ் கொரோனா தொற்று…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3914 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் 4929 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு 5000-க்கும் கீழ் பதிவாகி வரும் நிலையில் இன்று 4000-க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 3914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,87,400 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரேனாவிலிருந்து இன்று ஒரே நாளில் 4,929 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 6,37,637 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் இன்று 56 உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 10,642 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1036 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.