தகவல்கள்

ஹரியாணாவில் ஜூலை மாதம் பள்ளிகள் திறப்பு : 50% மாணவர்களுடன் இயங்கும் அமைச்சர் தகவல்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், வரும் ஜூலை மாதத்தில் பள்ளிகளை பரிசோதனை முறையில் திறக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ஹரியாணா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கன்வர் பால் தெரிவித்துள்ளார்.

முதலில் 10 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 6 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கும், அதனைத் தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்பள்ளிகள் திறக்கப்படும். சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் 50% மாணவர்களுடன் பள்ளிகள் இயங்கும். உதாரணமாக 30 மாணவர்களைக் கொண்ட ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் காலையிலும், 15 மாணவர்கள் மதியத்திலும் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.

பரிசோதனை முயற்சியாக முதலில் 4 முதல் 5 பள்ளிகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.