தமிழ்நாடு

2 வயது குழந்தை மர்மமான முறையில் மரணம்! குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி மீது கணவர் புகார்!

திருப்பத்தூர் அருகே இரண்டு வயது குழந்தை மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில், மனைவி மீது சந்தேகம் இருப்பதாக கணவர் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த இதயம் நகரில் வசித்து வந்தவர்கள் சக்திவேல் – லாவண்யா தம்பதி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 8 மாதத்திற்கு முன்னர் வேலூரில் உள்ள தாய் வீட்டிற்கு லாவண்யா குழந்தையுடன் சென்றுள்ளார். மேலும் அங்கு அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், லாவண்யாவும், அவரது தாய் சாந்தியும் குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி, சக்திவேலிடம் அதன் சடலத்தை கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

குழந்தையின் கழுத்து மற்றும் முகத்தில் காயங்கள் இருந்ததைப் பார்த்து சக்திவேலும், அவரது உறவினர்களும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து குழந்தையின் மர்ம மரணம் தொடர்பாக தனது மனைவி லாவண்யா மீது சந்தேகம் உள்ளதாக, சக்திவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.