தகவல்கள்

லாஸ்ட் டேட்! மின் கட்டணம் செலுத்த இன்றே கடைசி…

மின் கட்டணம் செலுத்த கொடுத்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது… மறக்காமல் இணையம் வழியாக கட்டணத்தை செல்டுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். மின் கட்டணம் செலுத்த அரசு அளித்திருந்த கால அவகாசம் இன்றோடு முடிவடைகிறது. கட்டணம் செலுத்தாத நுகர்வோர் முடிந்தளவு இணையம் வழியாக இன்று செலுத்திவிடும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடங்கியதையடுத்து, மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. அதே வேளையில் மக்கள் மின் கட்டணம் செலுத்தவும் சிரமப்படும் சூழல் உள்ளதாக வேதனை தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று அச்சம் காரணமாகத் தொழில் முடங்கிப் போன அதே சமயத்தில் பலர் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதை முன்வைத்து அரசிடம் உதவி கேட்டு வந்தனர்.

 

இதற்கிடையே மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருப்பதால் அவ்வப்போது கால நீடிப்பு செய்து தமிழ்நாடு மின்சார வாரியம் அவகாசம் அளித்து வந்தது. தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் இந்த கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
குறிப்பாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மின் நுகர்வோருக்கு ஜூலை 15ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இன்றோடு கால அவகாசம் முடிவடையும் நிலையில், கட்டணம் செலுத்தாதவர்கள், மறக்காமல் கட்டணத்தைச் செலுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முடிந்தளவு நேரடியாகச் சென்று தொற்றுக்கு ஆளாகாமல், வீட்டிலிருந்தபடி ஆன்லைனில் செலுத்தும்படி மின் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. இன்று கட்டணம் செலுத்தாத பட்சத்தில் அபராதத் தொகை அல்லது மின்சாரத்தைத் துண்டிக்க வாய்ப்புள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.