இந்தியா

“போலீஸ் உதவாமா இருக்கலாம் , ஆனா என் அப்பாவுக்கு நா இருக்கேன்”கொளுத்தும் வெயிலில்… வயதான தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்!

ஆட்டோவில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்து வீட்டிற்கு கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 20-ந் தேதி முதல் முக்கிய சேவைகள் மற்றும் ஊரக பகுதிகளில் சிறு குறு தொழில்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதியொட்டி, அத்தியாவசிய தேவைகள் அல்லாத வாகன போக்குவரத்துக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம்  கொல்லம் மாவட்டம் புனலூரில் நடந்திருக்கிறது. குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டிருக்கிறார். அதனால் அவர் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு புனலூர் தாலுக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக காய்ச்சலில் இருந்து குணமடைந்துவிட்டார். அதனால் அவரை அழைத்துச் செல்ல அவரின் மகன் ஆட்டோ ரிக்‌ஷாவில் வந்திருக்கிறார். அப்போது சாலையில் இருந்த காவலர் அவரது வாகனத்தை நிறுத்தி அனுமதிக்க மறுத்துவிட்டார்.

இதனையடுத்து வேறு வழியில்லாததால், நடக்க முடியாத நிலையில் இருந்த 65 வயது நபரை, அவரது மகன் ஒரு கிலோ மீட்டர் தூரம் தோளில் சுமந்தே வீட்டிற்கு கொண்டு சென்றார். அப்போது அவரது தாயாரும் நடந்தே உடன் சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி ஆட்டோ தடுத்து நிறுத்தப்பட்டாலும், உடல்நலம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வதற்கு ஆட்டோவை அனுமதித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.