சினிமா

செய்தியாளர்களைச் சந்திப்பைத் தவிர்த்தார் – விஜய் சேதுபதி

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி தொடங்கி கவிஞர்கள் தாமரை, வைரமுத்து தொட்டு தமிழ் தேசிய தலைவர்கள் சீமான், திருமுருகன் காந்தி வரை அனைவரும் விஜய் சேதுபதிக்கு படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

திரைத்துறையிலிருந்தும் பலரும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்துவருகிறார். 800 பட விவகாரம் சர்ச்சையானப் பிறகு எந்த பொது நிகழ்விலும் அவர் கலந்துகொள்ளவில்லை. இந்தநிலையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடந்த இயற்கைபானம் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் விஜய்சேதுபதி தமிழர் பாரம்பரிய உடையில் விவசாயிகளுடன் கலந்துகொண்டார். இந்த விழாவில் மேடையில் விஜய் சேதுபதி பேசுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் எதுவும் பேசவில்லை. மேலும் விஜய்சேதுபதி வருகை அறிந்து அங்கு வந்த செய்தியாளர்களையும் அவர் சந்திக்க மறுத்து நகர்ந்தார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.