விளையாட்டு
‘அடுத்த ஐ.பி.எல்லிலும் தோனியே கேப்டன்’ – சி.எஸ்.கே சிஇஓ அறிவிப்பு
அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என நம்பிக்கையில் இருப்பதாக சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் அணி விளையாடிய 12 ஆட்டங்களில், 4-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. முதல் முறையாக ப்ளே ஆப் வாய்ப்பையும் சிஎஸ்கே பறிகொடுத்தது. தோனியும் இந்த தொடரில் சொல்லி கொள்ளும்படி விளையாடவில்லை.
இந்த நிலையில், அடுத்த ஐபிஎல் தொடருக்கு தோனி தலைமை தாங்குவாரா என கேள்வி எழுந்தது. இது குறித்து விளக்கம் அளித்த சிஎஸ்கே தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், ஒரு ஆண்டு மோசமாக விளையாடினால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டியதில்லை எனக்கூறினார்.