தமிழ்நாடு

குறட்டை பிரச்னையை கண்டறியும் புதிய சிகிச்சை…

தூக்கத்தின் போது ஏற்படும் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை பிரச்னையை கண்டறியும் புதிய சிகிச்சை பிரிவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியரின் நமக்கு நாமே திட்ட நிதியில் 20,00,000 மதிப்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தூக்கத்தின் போது ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சு திணறல் ஆகியவற்றை கண்டறிந்து பரிசோதனை செய்து அதற்கான காரணங்களை துல்லியமாக கண்டறிய உதவும் புதிய சிகிச்சை பிரிவை மருத்துவமனை முதல்வர் சங்குமணி தொடங்கிவைத்தார்.

இந்த இயந்திரம் மூலம் சுவாசத்தில் உள்ள ஆக்சிஜன் மற்றும் இரத்தத்தில் காணப்படும் குறைவாக செல்லகூடிய ஆக்சிஜன் குறைபாடு, இதயம், நுரையீரல் கோளாறுகள், மற்றும் ரத்த அழுத்தம் அனைத்தையும் கண்டறியலாம். இதில் முக்கியமாக குறட்டைக்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்கேற்றார் போல சிகிச்சை வழங்கப்படும்.

தனியார் மருத்துவமனைகளில் 5000 கட்டணம் உள்ள நிலையில் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவச பரிசோதனை செய்யப்படும் மேலும் இதன் மூலம் ECG, EEG,ENG, EOG, SPO2 போன்ற பரிசோதனைகளும் செய்துகொள்ளலாம். இதேபோன்று உடல்பருமன் உள்ளவர்கள், மூக்கடைப்பு உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, இருதய கோளாறுகள் உள்ளவர்கள் இந்த தூக்க ஆய்வக பரிசோதனை மூலமாக பயன்பெறலாம். தென்தமிழகத்தில் மதுரையில் முதன்முறையாக இந்த சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.