விளையாட்டு

இங்கிலாந்து Vs பாகிஸ்தான் 3-வது டெஸ்ட் – ஜாக் கிராவ்லி முதல் சதம் அடித்து அபாரம்…

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், ஜாக் கிராவ்லியின் அபார சதத்தால், இங்கிலாந்து வலுவான நிலையை எட்டியுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையே மூன்றவாது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட், சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

பின்னர், இளம் வீரர் ஜாக் கிராவ்லியுடன் , விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜோஸ் பட்லர் கைகோர்த்தார். இந்த இணை, பொறுப்பாக ஆடி அணியின் ரன் விகிதத்தை உயர்த்தியது. குறிப்பாக நேர்த்தியாக ஆடிய கிராவ்லி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து இந்த இணையை பிரிக்க, பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனளிக்காமல் போனது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. ஜாக் பிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.