சினிமா

சமூக வலைதளத்தில் பிரபல நடிகை குறித்து ஆபாச பதிவு..!

பாலிவுட் நடிகையும், நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளுமான சோனாக்‌ஷி சின்ஹா குறித்து, சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிட்ட 27 வயது இளைஞரை மும்பை போலீசார் கைது செய்தனர். சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து வாரிசு நடிகர்கள் மீது சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆபாசக் கருத்துகளும், அவதூறு பதிவுகளும் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் பதிவிட்ட வீடியோவிற்கு கீழே மிகவும் தரக்குறைவான சொற்களால் ஒருவர் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து கடந்த ஏழாம் தேதி சோனாக்‌ஷி சின்ஹா புகாரளித்திருந்த நிலையில், அந்நபரை மும்பை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். அவர் பெயர் ஜாதவ் என்பதும், உணவகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.