அறிவியல்இந்தியா

கொரோனாவை குறைக்க இந்தியாவில் புதிய தடுப்பூசி…! இறப்பு விகிதத்தை குறைக்க விரைவில் சிகிச்சை தொடங்கும்.

கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் காட்டுத்தீ போல் தொடர்ந்து பரவி வருவதால் அதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை தாண்டி உள்ளது.பலி எண்ணிக்கை 872 ஆக உயர்ந்து உள்ளது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புகளின் இறப்பு விகிதத்தை குறைக்க புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் விரைவில் சிகிச்சை தொடங்கும் என சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.பொதுவாக தொழுநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி இது, முதலில் தொழுநோய்க்கான நோயெதிர்ப்புத் தடுப்புக்காக உருவாக்கப்பட்டது. தொழுநோயை கட்டுப்படுத்தும் மைக்கோ பாக்டீரியம் என்கிற தடுப்பு மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடும் என்று இந்திய விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
காசநோய்க்கு கண்டுபிடிக்கப்பட்ட பி.சி.ஜி. தடுப்பு மருந்துடன் தொடர்பு உடையதுதான் இந்த மைக்கோ பாக்டீரியம் மருந்து என்று கூறப்படுகிறது, எனவே கொரோனாவுக்கும் இது பயனளிக்க வாய்ப்பு இருக்கிறது என்கிற அடிப்படையில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்) இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. இந்த ஆராய்ச்சிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்து உள்ளார்.

இந்த நிலையில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (பிஜிஐஎம்இஆர்) ஆராய்ச்சியாளர்கள் மைக்கோபாக்டீரியம் டபிள்யூ ஆய்வை நடத்தி உள்ளனர். எய்ம்ஸ் டெல்லி மற்றும் எய்ம்ஸ் போபால் ஆகிய மருத்துவமனைகளுடன் இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு இணைப்பாக மைக்கோபாக்டீரியம் டபிள்யூ (எம்.டபிள்யூ) தடுப்பூசியை பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்துள்ளனர்.எம்டபிள்யூ தடுப்பூசி (வெப்பத்தால் கொல்லப்பட்ட மைக்கோபாக்டீரியம் இன்டிகஸ் பிரானி) என்பது கொரோனா வைரஸுக்காக தாயாரிக்கபட்ட ஒரு தடுப்பூசி அல்ல, ஆனால் அது ஒரு துணைப் பொருளாக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கூறி உள்ளது.

முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறி இருப்பதாவது:-

சமீபத்தில் முடிவடைந்த மல்டி சென்டர் சோதனையில், கடுமையாக பாதிக்கப்பட்ட ஐ.சி.யூ நோயாளிகளின் இறப்பைக் எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தோம்.கொரோனா நோயாளிகளிடம் காணப்படும் சைட்டோகைனை எம்டபிள்யூ தடுப்பூசி குறைக்கக்கூடும், இதனால் இந்த நோயாளிகளை நிர்வகிப்பதில் பலனளிக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் குறைக்கும். ஆய்வுக்கு முந்தைய கட்டத்தில், கொரோனா உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு நோயாளிகளில் எம்டபிள்யூ தடுப்பூசி இன் பாதுகாப்பை நாங்கள் ஆய்வு செய்து உள்ளோம். மேலும் குறுகிய கால பாதகமான விளைவுகள் எதுவும் காணப்படவில்லை. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆதரவு மருத்துவ பரிசோதனை முடிவடைந்த பின்னரே நீண்டகால பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் பயன்பாட்டின் தாக்கம் அறியப்படும், இது மூன்று மையங்களிலும் விரைவில் தொடங்கப்படும். முடிவுகளின் விளைவு மற்றும் அதன் பயன்பாடு பற்றி சொல்வது இது ஆரம்ப கட்டம் தான் எனக் கூறினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.