இந்தியாதொழில்நுட்பம்

கூகுள் பே மேல் வழக்கு பதிவு !! நீதிமன்றத்தில் ஆர்பிஐ தந்த விளக்கம் !!

இந்தியாவின் பண பரிவர்த்தனை செயலிகளில் கூகுள் பே மிக பிரபலமான ஒன்று.பெரும்பாலானோர் கூகுள் பெ மூலமாகவே ஒன்லைன் பண பரிவர்த்தனைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கூகுள் பே என்பது ஒரு செயலியைஅளிக்கும் 3-ம் தரப்பு சேவை நிறுவனம் மட்டும்தான்’’ என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. பணப் பரிவர்த்தனைக்கென தனி சிஸ்டம் எதையும் அது உருவாக்கி செயல்படுத்தவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

எனினும் பணப் பரிவர்த்தனை சட்டம் 2007-ன் படி அது செயல்படுவதாகவும், எத்தகைய விதி மீறலும்இல்லை எனவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது. உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொதுநல வழக்கு ஒன்றை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதானவிசாரணை டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, ‘‘கூகுள் பே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் செயலி. அது விதிமீறல் எதையும் செய்யவில்லை’’ என்றார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாயல் பாஹல், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இதுதொடர்பான விரிவான விசாரணை ஜூலை 22-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.