ஒவ்வொரு விடியலையும் மகிழ்வுடன் தொடங்கலாம்!!!
உங்களுக்கென நீங்கள் அமைத்துள்ள குறிக்கோளை அடைய தினமும் உங்கள் தினத்தை உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றவாறு புதுப்பித்துக் கொள்ள முடியும். நம் கனவுகளையும், குறிக்கோள்களையும் அடைய தடைகள் பல வரும். முதலில் உங்கள் கவனத்தை அதில் செலுத்தி விடாமல் உங்கள் நோக்கத்தை மட்டும் திசை திருப்பாமல் பார்த்து கொள்ளுங்கள். உங்கள் குறிக்கோளை அடைய பிற மனிதர்கள் மட்டும் தடை என எண்ண வேண்டாம். உங்களுக்குள் இல்லாமல் இருக்கும் சில ஆற்றல்களும் இருக்கலாம். உங்களுக்கு தெரியாத விஷயங்களை கற்று கொள்வதில் சிரமம் ஏற்படுவது, புதிதாக ஒன்றை கற்கும் பொழுது புரிதல் இல்லாமல் தொடங்குவது, தேவையற்ற பயம், உங்கள் மீது நம்பிக்கை இல்லத்தாதிருத்தல் என எதுவானாலும் உங்கள் குறிக்கோளை அடைய தடையாக உங்களுக்குள் இருக்கும் சிலவற்றை தூக்கி எறியுங்கள்.
உங்கள் குறிக்கோளை அடைய பிற மனிதர்கள் மட்டும் தடை என எண்ண வேண்டாம். உங்களுக்குள் இல்லாமல் இருக்கும் சில ஆற்றல்களும் இருக்கலாம். உங்களுக்கு தெரியாத விஷயங்களை கற்று கொள்வதில் சிரமம் ஏற்படுவது, புதிதாக ஒன்றை கற்கும் பொழுது புரிதல் இல்லாமல் தொடங்குவது, தேவையற்ற பயம், உங்கள் மீது நம்பிக்கை இல்லத்தாதிருத்தல் என எதுவானாலும் உங்கள் குறிக்கோளை அடைய தடையாக உங்களுக்குள் இருக்கும் சிலவற்றை தூக்கி எறியுங்கள். தினமும் காலை உங்கள் தினத்தை ஆரம்பிக்கும் முன், இன்று புதிதாக ஒரு விஷயத்தை கற்க போகிறோம். அதில் ஏற்படும் நன்மை, தீமை என இரண்டையும் சமாளிக்கும் திறன் வேண்டும் என்பதற்கு ஏற்றவாறு உங்களை நீங்கள் தயார் படுத்துங்கள்.
உங்கள் வேலையானாலும், புதிதாக படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க தொடங்கினாலும், புதிய தொழில் தொடங்க முயற்சித்தாலும் அன்றைய நாளை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ள தினமும் உங்களை புதுப்பிக்க தேவையற்ற சிந்தனைகள், வேண்டாத பழைய எண்ணங்களை விட்டு ஒழியுங்கள். அதில் இருந்து உங்களுக்கு எந்த ஒரு நல்ல காரியங்களும், கிடைக்கப்போவதில்லை. உங்கள் லட்சியத்தை அடைய தினமும் அது சார்ந்த தேடல்களை மனதில் விதையுங்கள். கனவுகள் சார்ந்து எதையும் எதிர்பாராது உழைப்பை முன் வையுங்கள்.
இலட்சியத்தை அடைவது எளிது. எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கும் முன் இது வராது, கடினம் எனும் சிந்தையை அகற்றுங்கள். உங்களால் முடியும் என முயற்சி செய்து பாருங்கள். உங்கள் லட்சியத்தை அடைய தினமும் அது சார்ந்த தேடல்களை மனதில் விதையுங்கள். கனவுகள் சார்ந்து எதையும் எதிர்பாராது உழைப்பை முன் வையுங்கள். இலட்சியத்தை அடைவது எளிது. எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கும் முன் இது வராது, கடினம் எனும் சிந்தையை அகற்றுங்கள். உங்களால் முடியும் என முயற்சி செய்து பாருங்கள்.