சென்னை

ஆட்டோவை எரித்தவருக்கு புது ஆட்டோ வாங்க உதவிய உதயநிதி ஸ்டாலின்

ஆட்டோ ஓட்டுனர் தாண்டவமுத்து என்பவர் தனது ஆட்டோ உரிமத்தை புதுப்பிப்பதற்காக சென்னை அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு பலமுறை சென்றுள்ளார். ஆனால் அவரை அதிகாரிகள் பலமுறை அலைக்கழித்துள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என்று அவர் அழுது புலம்பிய போதும் அதிகாரிகள் மனமிரங்கவில்லை. வருமானம் இல்லாமல் அவர்கள் கேட்கும் எட்டாயிரம் ரூபாயை கொடுக்க முடியவில்லை. விரக்தியில் அண்ணாநகர் அலுவலகத்திலேயே ஆட்டோ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தினார். அதே பெட்ரோலை தன்மீது ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

இந்த செய்தி நேற்று முதல் தீயாய் பரவியது. இதைக் கேள்விப்பட்டு திமுக இளைஞர் அணியின் சார்பில் தாண்ட முத்துவுக்கு புதிய ஆட்டோ வாங்க உதயநிதி ஸ்டாலின் இன்று நிதி உதவி அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.