உலகம்

7 இந்தியர்கள் லிபியாவில் கடத்தல்..!

லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களை மீட்பது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார். லிபியாவில் கட்டுமானம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏழு இந்தியர்கள் கடந்த மாதம் 14-ஆம் தேதி கடத்தப்பட்டனர். இந்தியா திரும்புவதற்காக திரிபோலி விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது ஆஷ்வெரிஃப் (Asshwerif) என்ற இடத்தில் இவர்கள் கடத்தப்பட்டனர்.

ஆந்திரா, உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களைச் சேர்ந்த இந்த தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், தொழிலாளர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாவும் அனுராக் ஸ்ரீவத்ஸவா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து லிபிய அரசிடம் பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.