சென்னை

மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை – மருத்துவமனையில் பரபரப்பு!

சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகள் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி தற்கொலை செய்துள்ளார். ராயப்பேட்டை பாலாஜி நகர் பகுதியை சேர்த்த 57 வயதான நபர் 25ம் தேதி கோரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வந்த அந்த நபர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஸ்டான்லி மருத்துவமனையில் நேற்று ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இன்று மேலும் ஒருவர் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.