சினிமா

“சிவகார்த்திகேயன்” முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம்.

இந்தப்படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவிருக்கிறாராம் சிவகார்த்திகேயன். ரஜினிமுருகன் படத்தில் கடைசியில் ஒரு காட்சியில் இரட்டைவேடங்களில் வருவார்.ரெமோ படத்தில் அவரே பெண்வேடம் போட்டு நடித்தார்.

இப்போது புது இயக்குநர் அசோக் இயக்கவிருக்கும் படத்தில் முழுமையான இரண்டு வேடங்கள் என்று சொல்லப்படுகிறது.

இரட்டைவேடங்கள் என்பதும் மிகவும் ஜனரஞ்சகமான கதை என்பதும்தான் புது இயக்குநரின் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டதன் இரகசியம் என்கிறார்கள்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.