தமிழ்நாடு

மாணவியின் கையைப்பிடித்து இழுத்தவர் கைது…

இராசிபுரம் வெண்ணந்தூர் அடுத்த அத்தனூர் அம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., காலனி உள்ளது. இங்குள்ள பொது குடிநீர் குழாயில், ஹரிஹரன் மனைவி மோகனா தண்ணீர் எடுத்து சென்று கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக 8 ஆம் வகுப்பு படிக்கும் அவரது 13 வயது மகள் தண்ணீரை குடத்தில் பிடித்து வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியை சேர்ந்த கருப்பண்ணன் மகன், சுப்ரமணி, மாணவியிடம் தகராறு செய்ததுடன் கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டுள்ளார். இதை பார்த்த மோகனா தட்டிக் கேட்டபோது, அவரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மோகனா வெண்ணந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குபதிந்த போலீசார் சுப்ரமணியை கைது செய்து நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.