தமிழ்நாடு

மத்திய அரசின் புதிய தளர்வுகள், தொடரும் தடைகள் என்னென்ன?

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்து நிலையில், அதன்பிறகு மாத மாத புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் நீட்சியாக செப்டம்பர் 30-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. தமிழக அரசு சார்பில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், மத்திய அரசு புதிய தளர்வுகளுடன் ஐந்தாம் கட்ட ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.அக்டோபர் 15-ம் தேதித்துக்குப் பிறகு 50% இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கப்படுகிறது.நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கவும் அனுமதிக்கப்படுகிறது.மாநிலங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு எந்த அனுமதியும் தேவையில்லை.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதிவரை தொடரும்.மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதித்துள்ள வழிகளைத் தவிர மற்ற சர்வதேச போக்குவரத்துக்கு தடை தொடரும்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.