இயற்கைதமிழ்நாடு

4 வருஷத்துக்கு’ பிறகு சென்னைக்கு வரும் ‘அடுத்த புயல்’ நிவார்!.. பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து உள்ளார்..

முன்னதாக 4 ஆண்டுகளுக்கு முன், ‘வர்தா’ புயல், சென்னையை பதம் பார்த்ததை எளிதில் மறந்துவிடமுடியாது. இதே போல சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை, ‘நிவார்’ புயல் குறி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இன்று காலை நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 740 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது. இதன் நகர்வை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

நாளை(நவ.,24) அதிகாலை முதல், சென்னை மற்றும் சுற்றுப்புற கடலோர மாவட்டங்களில், புயலின் தாக்கத்தால், அதிக கன மழை பெய்யும் என்றும், திடீர் மழை காரணமாக வெள்ளப் பெருக்கு உண்டாவதுடன், முன்னெச்சரிக்கை பணிகளை துவங்கவும், மீட்பு குழுவை தயார் நிலையில் வைத்திருக்கவும் வேண்டிய அவசர நிலையும் அவசியமாகியுள்ளது.

குறிப்பாக, மாமல்லபுரம் அருகேதான் புயல் கரையைக் கடக்கும் என்பதால், கல்பாக்கம் அணு மின் நிலையம், வல்லுார், எண்ணுார் மின் நிலையங்கள், சென்னை, எண்ணுார், காரைக்கால், பரங்கிப்பேட்டை, நாகை மற்றும் கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.