தமிழ்நாடு

தேனியில் இரண்டு மகள்களுக்கு விஷ விதைகள் கொடுத்து தாயும் தற்கொலை…

தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் குமார் செண்பகவள்ளி(29) தம்பதி. இவருக்கு சுரேனா(10) மற்றும் சுரேஸ்ரீ(7) என இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் சுதர்சன் (3) என்ற மகனும் உள்ளனர். கணவர் சுரேஷ்குமார் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கணவன் மனைவி இருவருக்குமிடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில்  செண்பகவள்ளி மனமுடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் கணவர் மற்றும் மகன் இல்லாத நிலையில் தற்கொலை செய்ய கொள்ள முடிவு எடுத்ததாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து விஷ விதைகளை (அரளி விதயை) அரைத்து அருந்தி தன் இரண்டு மகள்களுக்கும் கொடுத்துள்ளார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் அவர்கள் 3 பேரையும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் செண்பகவள்ளி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் தீவிர சிகிச்சையில் இருந்த இரண்டு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்து செண்பகவள்ளியின் தந்தை முனியாண்டி, கானாவிலக்கு காவல் நிலையத்தில் தனது மகள் 2 ஆண்டுகளாக தீராத வயிற்று வலியில் இருந்ததாகவும், இதனால் தற்கொலை செய்து கொண்டதாகவும் தான் இறந்த பிறகு மகள்களை யார் பராமரிப்பார் என குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தாய் தனது இரு மகள்களுக்கும் விஷம் கொடுத்து  தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.