தகவல்கள்

Bigg Boss Tamil 4 – கண்ணீர் விடும் அனிதா சம்பத்..!

எனக்கு அட்ரஸ் கிடையாது. நான் எனது பெயரை கஷ்டப்பட்டு சம்பாதித்துள்ளேன் என செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் கண்ணீர் மல்க அழுது கொண்டே இன்றைய ப்ரோமோவில் கூறுகின்றார்.பிக்பாஸ் தொடங்கிய நாள் முதல் சண்டையாக அனிதா, சுரேஷ் இடையே மோதல் வெடித்தது. அனிதா விளையாட்டாக சுரேஷ் குறித்து ஒரு செய்தியை தொகுத்து அழகாக வாசித்துக் காட்டினார். பலரும் இதற்கு பாராட்டு தெரிவித்த நிலையில் சுரேஷ், செய்தியாளர்கள் சிலர் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும் என்பதால் தள்ளி இருக்க வேண்டும் என கூறினார்.

இதனால் கடுப்பான அனிதா செய்தியாளர்கள் செய்தி வாசிக்கும் பொழுது எச்சில் தெறிக்கும் என நீங்கள் கூறியது என்னை காயப்படுத்தியது என சுரேஷிடம் வாக்குவாதம் செய்தார்.அதற்கு செய்தியாளர் என்ற வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை என சுரேஷ் மறுப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து “நான் ஒரு வார்த்தை எக்ஸ்ட்ரா சொல்லி விட்டேனாம். அவர் வேறு எதோ கூட சொன்னதாகவே இருக்கட்டும்.. எனக்கு மீனிங் அப்படித்தான் இருந்தது. அதைத்தான் நான் சொன்னேன்.உடனே அவர் அதை பிடித்துக்கொண்டார் என அனிதா கூற எஸ்கேப் ஆவதற்கு ‘நியூஸ் ரீடர்’ என்ற ஒன்று போதும். நான் நியூஸ் ரீடரை சொல்லவில்லை உடனே குறும்படம் போடுங்கள் என்கிறார்.ஓகே நீங்கள் நியூஸ் ரீடரை சொல்லவில்லை, ஆனால் எச்சில் தெறிக்கிறது என சொன்னீர்கள் அல்லவா? மக்கள் அதையெல்லாம் மறந்து விடுவார்கள்.நான் நியூஸ் ரீடர் என்ற எக்ஸ்ட்ரா வார்த்தையைப் போட்டு விட்டேன் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள்.

இது எனக்கு தேவை இல்லாத கெட்ட பெயர். அதை அவர் ஏற்படுத்தப் பார்க்கிறார். அவர் என்னை டிரிக்கர் செய்ய பார்க்கிறார். அவருக்கு புரமோ வர வேண்டும் என ஆசை, அவருக்கு நிறைய புரமோ வீடியோ போடுங்கள்” என பிக் பாஸ் வீட்டின் கேமரா முன்பு நின்று அனிதா சம்பத் கூறினார்.தற்போது கண்ணீர் மல்க பேசும் அனிதா, எனக்கு அட்ரஸ் கிடையாது. நான் எனது பெயரை கஷ்டப்பட்டு சம்பாதித்துள்ளேன். கெடுக்க கூடாது என நான் கஷ்டப்படுகிறேன். நமக்குன்னு ஒரு வீடு இருந்தா நன்றாக இருக்கும். எதிலாவது பில் பண்ண வேண்டுமென்றால் கூட அட்ரஸ் தெரியாது.

எங்க வீட்டில் நான் தான் பேரெண்ட் . எனது அப்பா. அம்மா, தம்பி எல்லாரும் எனக்கு குழந்தைகள். மிக கடினமாக எனது வாழ்க்கையை நான் கடந்துள்ளேன் என கூறுகின்றார்.பிக்பாசில் ஓப்பனாக பேசுவோருக்கு வெளியில் ரசிகர் பட்டாளம் எப்போதும் உண்டு. ஏற்கனவே ஆர்மிக்களை சம்பாதித்துள்ள அனிதா பிக்பாஸ் வீட்டில் கால் வைத்தநாள் முதல் அனைத்தையும் ஓப்பனாக பேசுகிறார். அனிதாவின் துயரத்தை கண்டு இவரது ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.