கதைகள்தமிழ்நாடு

47வது நினைவு தினம்- பெரியார் சிலைக்கு மரியாதை செய்த மு.க.ஸ்டாலின்..ட்விட்டரில் அனல் பறக்கும் கருத்து..

தந்தை பெரியாரின் நினைவுதினமான இன்று அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெரியாருக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை
தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதையொட்டி அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை, ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திமுக தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (டிச. 24), பெரியாரின் 47-வது நினைவுநாளை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், தனது முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டதாவது:

“சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் பெரியாரின் 47-வது நினைவு நாள் இன்று!

சமூக அடிமைத்தனம் தொடரும் வரை, ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார்!

அவர் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம்!”.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அவருடன் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, மாவட்ட கழக செயலாளர்கள் நே.சிற்றரசு, மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், வேலு, எம்.எல்.ஏ.க்கள் ப.ரங்கநாதன், தாயகம் கவி, ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் புழல் நாராயணன், மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பகுதி செயலாளர்கள் மதன் மோகன், அன்புதுரை, அகஸ்டின் பாபு, ஜெ.கருணாநிதி, ஏழுமலை, நிர்வாகிகள் சேப்பாக்கம் சிதம்பரம், துறைமுகம் காஜா, பூச்சி முருகன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.