தகவல்கள்

கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

ஆந்திர கடற்பகுதியில் காக்கிநாடாவுக்கு அருகில் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது.  இது அடுத்த இரண்டு நாட்கள் வடமேற்கு திசையில் நகரும்.இதன் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்மிதமான மழையும், புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும்.அதேபோல் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக மயிலாப்பூர் பகுதியில் 4.6 மில்லிமீட்டர் மழையும், கிண்டியில் 2.4 மில்லிமீட்டர் மழையும், பெரம்பூரில் 2.2 மில்லிமீட்டர் மழையும், அயனாவரத்தில் 2மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மொத்தமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து இன்று காலை வரை  17.9 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.செப்டம்பர் 15ஆம் தேதி ஆந்திர கடற்கரை பகுதியில் பலத்த காற்று 45-55   கிலோமீட்டர்  வேகத்தில் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் இப்பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.