உலகம்தகவல்கள்

’15 கோடி மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து’ 10 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட போகும் அழிவு குறித்து தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் வெளியிட்ட தகவல்..

சர்வதேச ஆய்வு நிறுவனமான தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் நடத்திய ஆய்வில், 2030ம் ஆண்டு முடிவில் ஆண்டுக்கு 14.7 கோடி பேர் ஆறுகள் மற்றும் கடலோர வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. வெள்ளத்தால் நகரங்களுக்கு ஏற்படும் சேதம் 712 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

2050ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்றும், மொத்தம் 221 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தி வேர்ல்டு ரிசோர்ஸ் இன்ஸ்டியூட் (WRI) கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இந்த ஆய்வுகளை நடத்தி வருகிறது. தற்போது சேதங்களின் அளவு அதிகரிப்பதை உண்மையில் காண முடிகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தெற்கு, தென்கிழக்கு ஆசியாவில் இருந்து மோசமான வெள்ள பாதிப்பு ஏற்படும் என்றும், குறிப்பாக வங்கதேசம், வியட்நாம், இந்தியா, இந்தோனேஷியா மற்றும் சீனாவில் உள்ள அதிக மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் கடலோர வெள்ள பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற கடலோர வெள்ளத்தால் இழக்க நேரிடும் நாடுகளில் சீனா, இந்தோனேஷியா வரிசையில் அமெரிக்கா 3வது இடம்பிடித்துள்ளது என்றும், லூசியானா, மாசசூசெட்ஸ் மற்றும் புளோரிடா ஆகிய மூன்று மாகாணங்களில் நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.