கதைகள்தமிழ்நாடு

வைகையில் ஆளுயரத்திற்கு பறந்த நுரையால் பரபரப்பு!! நுரை பொங்கி வருவதற்கு அமைச்சர் செல்லூர் ராஜுவின் விளக்கம்!!

மதுரை : வைகையாற்றில் இரசாயன கழிவு நீர் கலக்கவில்லை, வைகையாற்றில் நுரையை கண்டு பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார்.

மதுரை வைகையாற்றில் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தண்ணீரை சூழ்ந்த ஆகாய தாமரைகள் 10 ஜே.சி.பி இயந்திரங்கள் வழியே அகற்றப்பட்டு வருவதை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறுகையில் “வைகை அணையில் தண்ணீர் திறக்காமலே வைகையாற்றில் தண்ணீர் வருகிறது, வைகை ஆறு முழுதும் உள்ள ஆகாய தாமரை அகற்றப்பட்டு வருகிறது, நேற்று இரவு மதுரை மாவட்டம் முழுதும் கன மழை பெய்தது, 245 கோடி மதிப்பில் வைகையாற்றில் கலக்கும் கழிவு நீரை நன்னீராக மாற்ற திட்டம், வைகையாற்றில் கழிவு நீர் கலக்காத வண்ணம் நடவடிக்கைகள், வைகையாற்றில் 8 மாதங்களில் கழிவு நீர் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.

வைகையாற்றில் அதிக அளவில் தண்ணீருடன் கழிவு நீர் சேருவதால் வருவதால் நுரை வருகிறது, வைகையாற்றில் இரசாயன கழிவு நீர் கலக்கவில்லை, வைகையாற்றில் நுரையை கண்டு பொது மக்கள் அச்சப்பட தேவையில்லை, வைகையாற்றின் குறுக்கே ஆரப்பாளையம் பகுதியில் 12 கோடி மதிப்பில் மேலும் தடுப்பணை கட்டப்படும், 1 ஆண்டுக்குள் வைகையாறு எழில்மிகு வைகை ஆறாக மாற்றப்படும்” என கூறினார்

 

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.