தகவல்கள்தமிழ்நாடு

வீடு புகுந்து மொபைல் போன், பணம் திருடிய சிறுவன், மது அருந்த திருடியதாக, போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்..!

சேலம்: வீடு புகுந்து மொபைல் போன், பணம் திருடிய சிறுவன், மது அருந்த திருடியதாக, போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.சேலம், அன்னதானப்பட்டி, பொடாரன்காட்டை சேர்ந்தவர் ராமு, 35. இவரது மனைவி சாந்தி, 32. இவர்கள், நேற்று முன்தினம், வீட்டை திறந்து வைத்துவிட்டே தூங்கிவிட்டனர். இரவு, 10:30 மணிக்கு, அவர்கள் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், மொபைல் போன், 600 ரூபாயை திருடிக்கொண்டு வெளியேற முயன்றார். சத்தம் கேட்டு விழித்த சாந்தி, மர்ம நபரை பார்த்து கூச்சலிட்டார். மக்கள், அந்த நபரை சுற்றிவளைத்து பிடித்து, நன்கு கவனித்து, அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். விசாரணையில், செவ்வாய்ப்பேட்டை, பாண்டுரங்கன் தெருவைச் சேர்ந்த, 19 வயது சிறுவன், மது அருந்த திருடியதாக தெரிவித்தார். அவரை கைது செய்த போலீசார், மொபைல் போன், பணத்தை மீட்டனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.