தகவல்கள்

வாங்காத 7 லட்சம் ரூபாய் கடன் – வட்டியுடன் கட்ட சொல்லி மிரட்டும் வங்கி..!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் குப்பாண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டியன். இவர் அதே ஊரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார்; அதற்காக சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.

நாமக்கல் மாவட்டக் கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட கேவசப்பாண்டியன் புகார் அளித்தார். அதில் கடந்த டிசம்பர் மாதம் தனது வங்கிக் கணக்கில் தன்னைக் கேட்காமலும் ஆவணங்களைப் பெறாமலும், வங்கி கிளை மேலாளர் 7 லட்சம் ரூபாய் கடன் வரவு செய்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து கேள்வி கேட்டபோது, வங்கி கிளை மேலாளர் குஞ்சிதபாதம், பொது மேலாளர் மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் தன்னை மிரட்டியதாகவும், தனது வங்கிக் கணக்கு குறித்து பல பொய் ஆவணங்களைத் தயாரித்து தனது நிறுவனத்தை வாராக் கடன் உள்ள நிறுவனங்கள் பட்டியலில் சேர்த்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரியுள்ளார். இதையடுத்து, வங்கி கிளை மேலாளர் குஞ்சிதபாதம், பொது மேலாளர் மோகன் மற்றும் நிர்வாக இயக்குநர் காமகோடி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.