தகவல்கள்தமிழ்நாடு

மே 18 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படும்! – தமிழக அரசு அதிரடி..!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் வரும் 18ந்தேதி முதல் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ள அனைத்து அரசு அலவலகங் களும் வரும் 18ந்தேதி முதல் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
மேலும், வாரத்தின் 6 நாட்களும் இயங்க வேண்டும் எனவும், 50 சதவீதம் பணியாளர்களைக் கொண்டு சுழற்றி முறையில் இயங்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றலாம் .18-ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற வேண்டும் .
அரசு அலுவலகங்களில் ஊழியர்களை 3 குழுக்களாக பிரித்து வாரத்தில் தலா 2 நாட்கள் வீதம் பணியாற்ற வேண்டும்.
தலைமைச் செயலகம் முதல் மாவட்ட அரசு அலுவலகம் வரை அனைத்து பணியாளர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். தேவையான போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்படும்.அனைத்து அலுவலர்களும் பணிக்கு வர தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.