தமிழ்நாடு

மனுஸ்மிரிதி விவகாரத்தில் வைரமுத்து ட்வீட்…

”திருமாவளவன் தீட்டிய அரிவாள் தென்னவர் சுழற்றியதே – அவன் அரிமா போலே ஆர்த்த கருத்தும் அரிவையர் வாழ்வதற்கே – அதை அறிந்தும் சிலபேர் அழிம்பு புரிவது அரசியல் செய்வதற்கே – நாம் நெறியின் வழியே நீண்டு நடப்பது நீதி நிலைப்பதற்கே” என மனு ஸ்மிரிதி விவகாரத்தில் தொல். திருமாவளவன் எம்.பிக்கு ஆதரவாக கவிஞர் வைரமுத்து ட்வீட் செய்துள்ளார். பெண்கள் வாழ திருமாவளவன் தெரிவித்த கருத்து அவர்களின் நன்மைக்கானது. இது தெரிந்தும் சிலர் அரசியல் செய்வதற்காக முரண்படுகிறார்கள் என்றும், நீதி நிலைப்பதற்காகவே இவ்வழியில் நடக்கிறார் என திருமாவளவன் எம்.பியை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார் வைரமுத்து.

பெண்களை இழிவுபடுத்திய விதத்தில் எம்.பி.,திருமாவளவன் பேசியதாக கூறி அதனைக் கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகில் பாஜக மகளிரணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்தது. இதில் குஷ்பு, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்தனர். இந்நிலையில் கூட்டத்திற்கு அனுமதி அளிப்பது தொடர்பாக சிதம்பரத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐஜி நாகராஜன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர். அதில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அனுமதிப்பதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு எதிராக விசிக நடத்த இருக்கும் போராட்டத்துக்கும் போலீஸ் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.