உலகம்

பெண்களை தரக்குறைவாக பேசிய யூ ட்யூப் அட்மின் – வீடு புகுந்து தாக்கிய பெண்கள்…

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் யூடியூப் சேனல் நடத்திவருகிறார். அவர் தனது யூடியூப் இணையதளத்திலும், சமூக வலைதளங்களிலும் பெண்களை தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த திரைப்பட டப்பிங் கலைஞர் பாக்கிய லக்ஷ்மி மற்றும் பெண்ணிய சமூகச் செயற்பாட்டாளர்கள் தியா ஸனா, கவிஞர் சுகந்தகுமாரி, ஸ்ரீலட்சுமி ஆகியோர் கடந்த சனிக்கிழமையன்று திருவனந்தபுரத்திலுள்ள விஜய் நாயரின் வீட்டுக்குச் சென்று அவரை தாக்கியதுடன், கருப்பு மையை அவர் மீது ஊற்றினர்.

விஜய் நாயரைத் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்து அதையும் சமூக வலைதளங்களில் லைவ் செய்தனர்.பாக்ய லக்ஷ்மி மற்றும் அவருடன் சென்ற பெண்கள், கூட்டாகச் சேர்ந்து தாக்கும்போது விஜய் நாயர், “நீங்கள் மட்டும்தான் பெண்களா.. வேறு யாரும் பெண்கள் இல்லையா” எனக் கேட்டிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து மேலும் கோபத்தில் தாக்கும் பெண்கள் மன்னிப்பு கேட்குமாறு சொல்லியதும், ”கேரள மாநில பெண்களை, தெரிந்தோ தெரியாமலோ வேதனைப்படுத்தியிருந்தால் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

தாக்கியதுடன், விஜய் நாயரின் ஃபோனை பறித்து அதிலுள்ள யூ ட்யூப் வீடியோக்களை அகற்றியிருக்கிறார்கள் பெண்கள் அமைப்பினர்.அத்துமீறி நுழைதல், கூட்டமாகச் சேர்ந்து தாக்குதல் உள்ளிட்ட ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் தம்பனூர் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், பாக்யலஷ்மி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் விஜய் நாயர் மீதும் ஜாமீன் கிடைக்காத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜய் நாயர் மீதான வழக்கு சைபர் கிரைமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேரள அரசு பெண்கள் பக்கம் நிற்பதாக தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.