அறிவியல்சென்னை

புற்றுநோய் செல்களை அழிக்கும் “மஞ்சள்” – சென்னை ஐ.ஐ.டி ஆய்வில் தகவல்!!

புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய கர்குமின் என்கிற வேதிப்பொருள் மஞ்சளில் நிறைவாக இருப்பதால் அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர். சென்னை ஐஐடியில் நடத்தப்பட்ட ஆய்வில் புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றலை மஞ்சள் பெற்றிருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். உயிரிதொழில்நுட்பத் துறை பேராசிரியர் ரமா சங்கர் வர்மா தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு Pharmacological Reports என்கிற இதழில் வெளியாகியுள்ளது.இந்த ஆய்வில் புற்றுநோய் செல்களை அழிக்கக் கூடிய கர்குமின் என்கிற வேதிப்பொருள் மஞ்சளில் நிறைவாக இருப்பதால் அதை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர். அவ்வாறு ஆராய்ச்சி செய்த போது மஞ்சளில் இந்த கர்குமின்களானது நச்சுத்தன்மை இல்லாதவைகளாக இருந்துள்ளன. இது இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோயை உண்டாக்கக் கூடிய லுக்கிமியா செல்களை அழிப்பதற்கான சிகிகிச்சைக்கு உதவும் என்று கண்டுபிடித்துள்ளனர்.
அதேபோல் ப்ராஸ்டேட் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் , பெருங்குடல் புற்றுநோய் போன்றவற்றிற்கும் மஞ்சள் சிறப்பாக செயல்படும் என்று கண்டுபிடித்துள்ளனர். இருப்பினும் உலக அளவில் இன்னும் கர்குமின் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த ஆய்வு பொதுப்படையான கருத்துக்களுடன் அனைத்திற்கும் பொருந்தும் என குறிப்பிடப்படவில்லை.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.