உணவுஉணவுகள்

பாதாம் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்…?

ஊட்டச்சத்தான உணவுப் பட்டியல் என்றாலே நட்ஸ் வகைகளும் இடம் பெறும். குறிப்பாக மொறுமொறு என வாய்க்கு ருசியாகவும், சத்துக்களை அதிகம் கொண்டதுமான பாதாம் இடம் பெறும். ஆனால் அதுவே சிலருக்கு ஆபத்தாகவும் இருக்கும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.நார்ச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் இ என பல நன்மைகளை கொண்ட பாதாமானது இதயத்திற்கு நல்லது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும், புற்றுநோய் செல்களை அழிக்கும் என பல நன்மைகளை படித்திருப்போம்.

ஆனாலும் ஆண்டி பயாடிக் மாத்திரைகள் உட்கொள்பவர்கள், இரத்த அழுத்தம் கொண்டவர்கள், லாக்ஸடிவ்ஸ் மாத்திரை சாப்பிடுவோர், அவற்றை உட்கொள்ளும் வரை தற்காலிகமாக பாதாம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது அல்லது அவர்களின் மருத்துவரை கலந்து ஆலோசித்துவிட்டு சாப்பிடலாம்.ஏனெனில்; கையளவு பாதாமில் 0.6 மில்லிகிராம் மினரல் சத்து உள்ளதாம். இது 27 % தினசரி அளவுக்கு போதுமானது என்கிறது. எனவே அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது உட்கொள்ளும் மாத்திரையோடு தவறான கலவையாக மாறிவிடும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியங்கா கூறியுள்ளார்.

சாதாரணமாகவே பாதாமை அதிகம் உட்கொண்டாலே இரப்பைக் குடல் பிரச்னைகள் வரும் என்கிறார்.அதேபோல் நட்ஸ் அலர்ஜி கொண்டவர்களும் , நட்ஸ் சாப்பிட்ட பிறகு மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பவர்கள் பாதாமை தவிர்ப்பது நல்லது. இல்லையெனில் இது உயிருக்கே ஆபத்தாக முடியும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அதேபோல் மென்று முழுங்க சிரமப்படும் குழந்தைகள், பெரியவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், டைமென்ஷியா பிரச்னை உள்ளவர்களும் தவிர்க்க வேண்டும்.அதேபோல் வைட்டமின் ஈ மாத்திரைகளை உட்கொண்டு வருகிறீர்கள் என்றாலும் பாதாமை தவிர்க்க வேண்டும்.எனவே பாதாமை குறைந்த அளவு சாப்பிட்டாலே அதன் மருத்துவப் பலன்களை முழுமையாகப் பெறலாம்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.