உணவுகள்தகவல்கள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட “கடக்நாத்’ கருங்கோழிகள்…

சேலம்: நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கருங்கோழி கறிக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளதால் ஒரு கிலோ கறி ரூபாய் 1000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்கள் வருவதற்கு முன் நமது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் எந்த பயமும் இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருவதால், மக்கள் தங்களது சாப்பாட்டு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இதுவரை நொறுக்குத் தீனி, பாஸ்ட் புட், கூல்ட்ரிங்க்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்த நகர வாசிகள் அனைவரும் தற்போது காய்கறி, பழங்கள், பழச்சாறு உள்ளிட்டவற்றை எடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயலில் ஈடுபட்டு உள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல உணவு வகைகள் பரிந்துரைக்கப்பட்டு வந்தது.

அந்த வரிசையில், மத்தியபிரதேச மாநிலத்தில், காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்கருங்கோழிகள், சேலம் மாவட்டம் ஓமலூரில் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இந்த கருங்கோழி கறி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சில தகவல்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்ததால் மக்கள் அதை உண்மை என நம்பி வாங்கி சாப்பிட தொடங்கிவிட்டனர். இந்த கோழிகளுக்கு, பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், கடந்த மாதம் கிலோ ரூபாய் 450 க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், ஒரே மாதத்தில் விலை சரசரவென ஏறி கருங்கோழி கறி கிலோ ரூபாய் 1000க்கும் அதனுடைய முட்டை ரூபாய் 25 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.