கதைகள்தமிழ்நாடு

திருச்சியில் முதியவரை நடுரோட்டில் வைத்து அறையும் காவலர்.. வலைதளங்களில் தீயாய் பரவும் வீடியோ!

காவலர் ஒருவர் முதியவரைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

திருச்சி மாநகர ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை ரவுண்டானா பகுதியில் கன்டோன்மென்ட் சாலையிலிருந்து ஐயப்பன் கோவிலை நோக்கி சைக்கிளில் முதியவர் ஒருவர் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது அதே வழியில் மோட்டார் பைக்கில் வந்த காவலர் ஒருவரின் வாகனம் மோதியது.

ஆனால் சைக்கிளில் வந்த முதியவர், காவலரிடம் ஏதோ கூறிய நிலையில் ஆத்திரம் அடைந்த காவலர் பைக்கில் இருந்து இறங்கி முதியவரை தாக்குகிறார்.

இந்த வீடியோ வாட்சப் குழு, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து எது போன்ற சம்பவங்கள் மக்கள் கவனத்தை அதிகமாக பெறத்தொடங்கி உள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.