தமிழ்நாடு

தாய் வீட்டில் நகை திருடிய மகன் கைது…!

புதுச்சேரி அரியாங்குப்பம் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவரும், இவரது மனைவியும் கைப்பை தயாரிக்கும் நிறுவனத்தில்  வேலை செய்து வருகின்றனர். கடந்த 15ம் தேதி இவர்கள் சொந்த வேலை காரணமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று உள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 12 பவுன் நகைகள் திருடு போய் இருந்தன. இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். பூட்டியிருந்த வீட்டிற்குள் எந்த ஒரு கதவு உடைக்கப்படாமல்  பீரோவில் இருந்து 12 பவுன் நகை திருடப்பட்டிருப்பது  அதே வீட்டை  சேர்ந்தவர்களாக இருக்கும் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அவரது சொந்த மகன் தமிழ்செல்வன் திருடி இருப்பது தெரியவந்தது. அருகிலுள்ள மணவெளி திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசித்து வருபவர் இவர்  கள்ளச்சாவி போட்டு நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். பழக்கடை  ஒன்றில் இவர் வேலை செய்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக தான் வேலையை இழந்துள்ளதால் செலவுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் தாயின் நகைகளை  திருடியதாக வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து அவரிடம் இருந்து 12 பவுன் நகை பறிமுதல் செய்த போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு  சிறையில் அடைக்கப்பட்டார்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.