சென்னை

“தமிழக அரசு” சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழு அமைப்பு!

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் 1000-ஐ கடந்து பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் மொத்தம் 18,693 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 3,388 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் சென்னையில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும் கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மக்கள் வெளியே நடமாடுவதை காணமுடிகிறது.

இந்நிலையில் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் ஜெயக்குமார். கே.பி. அன்பழகன், காமராஜ், உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.