இயற்கைதமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

வடகிழக்கு பருவமழை காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மெற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழகம் மற்றம் கேரளாவில் மழை தீவிரமடைய தொடங்கி உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்தாகவும், வரும் 7ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வரும் 6ம் தேதி வரை ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.