சினிமாதகவல்கள்தமிழ்நாடு

“ஜோதிகாவை மன்­னிப்பு கேட்க சொன்னவர்களுக்கு”-சூர்யா தந்த நோஸ் கட்….

சில மாதங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற விருது வழங்­கும் நிகழ்வு ஒன்­றில் பேசிய ஜோதிகா கோவில்­கள், மருத்­து­வ­ம­னை­கள் குறித்­துப் பேசி­யது தற்­போது சர்ச்­சை­யாகி உள்­ளது. இதை­ய­டுத்து சமூக வலைத்­த­ளங்­களில் அவ­ருக்கு ஆத­ர­வா­க­வும் எதிர்ப்­பா­க­வும் பலர் பதி­விட்டு வரு­கின்­ற­னர்.

சூர்யா கொடுத்த அறிக்கையில்,

ஜோதிகா மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று சிலர் கருத்து தெரி­வித்­துள்ள நிலை­யில், ஜோதிகா தெரி­வித்த கருத்­தில் தங்­கள் தரப்பு உறு­தி­யாக இருப்­ப­தாக சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

கோவில்­க­ளைப் போலவே பள்­ளி­க­ளை­யும் மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் உயர்­வா­கக் கரு­த­வேண்­டும் எனும் கருத்­தை­தான் ஜோதிகா அண்­மை­யில் வலி­யு­றுத்­தி­ய­தா­க­வும் இதை சிலர் குற்­ற­மா­கப் பார்ப்ப­தா­க­வும் அவர் கூறி­யுள்­ளார்.

இதே கருத்தை விவே­கா­னந்­தர் போன்ற ஆன்­மி­கப் பெரி­ய­வர்­களே சொல்­லி­யி­ருப்­ப­தாக அவர் அறிக்கை குறிப்­பிட்­டுள்­ளார்.  “மக்­க­ளுக்கு உத­வி­னால் அது கட­வு­ளுக்­குச் செலுத்­தும் காணிக்கை என்­பது திரு­மூ­லர் காலத்­துச் சிந்­தனை. நல்­லோர் சிந்­த­னை­க­ளைப் படிக்­காத, காது கொடுத்து கேட்­கா­த­வர்­க­ளுக்கு இது தெரிய வாய்ப்­பில்லை.

அறி­ஞர்­கள், ஆன்­மி­கப் பெரி­யோர்­க­ளின் எண்­ணங்­க­ளைப் பின்­பற்றி ஜோதிகா வெளிப்­ப­டுத்­திய கருத்­தில் தங்­கள் தரப்பு உறு­தி­யாக இருப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், மதங்­க­ளைக் கடந்து மனி­த­நே­யமே முக்­கி­யம் என்­பதை தங்­கள் பிள்­ளை­க­ளுக்­கும் சொல்­லித் தர விரும்­பு­வ­தாக குறிப்­பிட்­டுள்­ளார்.

“பள்­ளி­க­ளை­யும் மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் இறை­வன் உறை­யும் இட­மா­கக் கருத வேண்­டும் என்ற கருத்தை எல்லா மதத்­தி­ன­ரும் வர­வேற்­கவே செய்­கின்­ற­னர்.

“கொரோனா கிரு­மித் தொற்று கார­ண­மாக இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்ள இந்த நேரத்­தி­லும் எங்­க­ளுக்கு கிடைத்த பேரா­த­ரவு நம்­பிக்­கை­யை­யும் மகிழ்ச்­சி­யை­யும் அளிக்­கிறது,” என்று சூர்யா தெரி­வித்­துள்­ளார்.

தவ­றான நோக்­கத்­தோடு தரக்­கு­றை­வாக சிலர் அவ­தூறு பரப்­பும்­போ­தெல்­லாம் நல்­லோர்­கள், நண்­பர்­கள், ரசி­கர்­கள் தங்­க­ளுக்கு துணை நிற்­ப­தா­க­வும் சூர்யா கூறி­யுள்­ளார்.
“முக­ம­றி­யாத எத்­த­னையோ பேர்‌ எங்­கள்‌ சார்­பாக பதில்‌ அளிக்­கி­றார்­கள்‌. ஊட­கங்­கள்‌ சரி­யான விதத்­தில்‌ இந்த சர்ச்­சை­யைக்‌ கையாண்­டன.

‘நல்ல எண்­ணங்­களை விதைத்து நல்ல செயல்­களை அறு­வடை செய்ய முடி­யும்‌’ என்­கிற நம்­பிக்­கையை இவர்­களே துளிர்க்­கச்‌ செய்­கி­றார்­கள்‌. எங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக நிற்­கும்‌ அனை­வ­ருக்­கும்‌ எங்­க­ளின்‌ நெஞ்­சார்ந்த நன்­றி­கள்‌,” என்று சூர்யா தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.

ஜோதிகா தமது பேச்­சுக்கு வருத்­த­மும் மன்­னிப்­பும் தெரி­விக்க வேண்­டும் என மிகத் தீவி­ர­மாக வலி­யு­றுத்தி வரும் நிலை­யில், சூர்யா இவ்­வாறு அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது பர­ப­ரப்­புக்கு வித்­திட்­டுள்­ளது.

 

நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். சூர்யாவின் அறிக்கையை குறிப்பிட்டு ‘சிறப்பு’ என அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், சூர்யாவின் இந்த அறிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

குறிச்சொற்கள்

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

There has been a critical error on your website.

Learn more about debugging in WordPress.